/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை பயிற்சி அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை பயிற்சி
அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை பயிற்சி
அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை பயிற்சி
அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை பயிற்சி
ADDED : ஜூன் 17, 2025 09:47 PM

உடுமலை; உடுமலை அரசு மருத்துவமனையில், தீயணைப்பு துறையினர் சார்பில், தீயணைப்பு ஒத்திகை பயிற்சி வழங்கப்பட்டது.
உடுமலை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையம் சார்பில், அரசு மருத்துவமனையில், ஒத்திகை பயிற்சி நேற்று நடந்தது.
தீ விபத்து நடந்தால், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் தீயை அணைக்கும் வழிமுறைகள் குறித்து டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
உடுமலை தீயணைப்பு மீட்பு நிலைய அலுவலர் லட்சுமணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பயிற்சியளித்தனர்.