Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கூவி கூவி காலிபிளவர் விற்பனை

கூவி கூவி காலிபிளவர் விற்பனை

கூவி கூவி காலிபிளவர் விற்பனை

கூவி கூவி காலிபிளவர் விற்பனை

ADDED : மார் 17, 2025 05:54 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்; வரத்து அதிகரிப்பால், காலிபிளவர் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று, தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் பெரிய காலிபிளவர் பூ, 15 ரூபாய்க்கு கூவிக்கூவி விற்கப்பட்டது.

தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டுக்கு கடந்த ஒரு வாரமாக காலிபிளவர் வரத்து அதிகமாக உள்ளது. மூட்டை மூட்டையாக, 500 - 600 கிலோ வரை காலிபிளவர் வந்து குவிவதால், விலை குறைந்துள்ளது.

வழக்கமாக பெரிய பூ, 35 - 50 ரூபாய், சிறிய பூ, 20 - 30 ரூபாய் என விற்கப்படும். வரத்து அதிகரிப்பால், பெரியது, 20 - 30 ரூபாய், சிறியது, 15 - 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை குறைவால் வீடுகளுக்கு ஒரு காலி பிளவர் வாங்குவோர் கூட கூடுதலாக ஒரு பூ சேர்த்து வாங்கிச் செல்கின்றனர்.

அதே விலை; அளவு அதிகம்


ரோட்டோர தள்ளுவண்டி, ஓட்டல், டீ, பேக்கரி கடைகளில் காலிபிளவர் சில்லி ஒரு பிளேட், 30 முதல், 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது, பெரிய காலிபிளவர் பூவே, 25 ரூபாய்க்கு விற்கும் நிலையில், காலிபிளவர் சில்லி விலை குறையவில்லை; பழைய விலையே தொடர்கிறது. அதே நேரம், வாடிக்கையாளர்களுக்கு காலிபிளவர் சில்லி பிளேட்டில் வழங்கும் அளவை அதிகப்படுத்தியிருப்பதாக, சில்லி வியாபாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் ஏமாற்றம்


விவசாயிகள் கூறியதாவது:

ஒரு ஏக்கரில் காலிபிளவர் பயிரிட, 70 - 80 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. கடந்த, மார்கழி மாதம் காலிபிளவர் விலை உயர்ந்திருந்தது; விலையை எதிர்பார்த்து பயிரிட்டோம். தற்போது, விலை இல்லை. லாபம் எதிர்பார்க்க முடியாது. தோட்டத்தில் அப்படியே விட்டால், வேறு விவசாயம் செய்ய முடியாது. கிடைத்த விலை கிடைக்கட்டும் என விற்பனைக்கு கொண்டு வருகிறோம்.

இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.

விவசாயிகள் ஏமாற்றம்

விவசாயிகள் கூறியதாவது:ஒரு ஏக்கரில் காலிபிளவர் பயிரிட, 70 - 80 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. கடந்த, மார்கழி மாதம் காலிபிளவர் விலை உயர்ந்திருந்தது; விலையை எதிர்பார்த்து பயிரிட்டோம். தற்போது, விலை இல்லை. லாபம் எதிர்பார்க்க முடியாது. தோட்டத்தில் அப்படியே விட்டால், வேறு விவசாயம் செய்ய முடியாது. கிடைத்த விலை கிடைக்கட்டும் என விற்பனைக்கு கொண்டு வருகிறோம்.இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us