ADDED : மே 29, 2025 12:30 AM

மலை மாவட்டங்கள் மற்றும் வனப்பகுதிகளில் மட்டும் இல்லை.
சமவெளி பகுதிகளில் கூட, பலா மரங்கள் வளர்கின்றன. குட்டை ரகத்தை சேர்ந்த இந்த பலா மரங்களை, குடியிருப்புவாசிகள், தங்களின் வீடுகளின் முகப்பில் வைத்திருக்கின்றனர்.திருப்பூர், அவிநாசி உள்ளிட்ட பல இடங்களில், பலரது வீடுகளில் ஓரிரு பலா மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவை மரமாக மாறி, தற்போது பலா சீசன் துவங்கியுள்ள நிலையில், காய்த்து, பழுக்க துவங்கியிருக்கின்றன. இது, குடியிருப்புவாசிகளை குஷிப்படுத்தியிருக்கிறது.