/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தீபாவளிக்கு பின் பின்னலாடை நிறுவனங்கள் செயல்படத் துவங்கின! 27ம் தேதி முதல் முழுவீச்சில் இயங்க ஆயத்தம்தீபாவளிக்கு பின் பின்னலாடை நிறுவனங்கள் செயல்படத் துவங்கின! 27ம் தேதி முதல் முழுவீச்சில் இயங்க ஆயத்தம்
தீபாவளிக்கு பின் பின்னலாடை நிறுவனங்கள் செயல்படத் துவங்கின! 27ம் தேதி முதல் முழுவீச்சில் இயங்க ஆயத்தம்
தீபாவளிக்கு பின் பின்னலாடை நிறுவனங்கள் செயல்படத் துவங்கின! 27ம் தேதி முதல் முழுவீச்சில் இயங்க ஆயத்தம்
தீபாவளிக்கு பின் பின்னலாடை நிறுவனங்கள் செயல்படத் துவங்கின! 27ம் தேதி முதல் முழுவீச்சில் இயங்க ஆயத்தம்

சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள்
கடந்த, 20ம் தேதி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா செய்து, கடந்த 17ம் தேதி முதல் விடுமுறை அளித்தன. மதுரை, தேனி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட வெளிமாவட்ட தொழிலாளர் பெரும்பாலானோர், சொந்த ஊர்களுக்கு சென்று, தீபாவளி கொண்டாடியுள்ளனர். வெளிமாநில தொழிலாளர்களை பொறுத்தவரை, திருப்பூரிலேயே தீபாவளி கொண்டாடினர்.
பணிக்கு திரும்பிய வடமாநில தொழிலாளர்கள்
பண்டிகை முடிந்து மூன்று நாளான நிலையில், சில பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், நேற்று முதலே இயக்கத்தை துவக்கியுள்ளன. ஒடிசா, ஜார்கண்ட், உ.பி., போன்ற சொந்த ஊர் செல்லாத, வடமாநில தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். குறைந்தளவு தொழிலாளரை கொண்டு ஆடை தயாரிப்பு பூர்த்தி செய்யமுடியாது. இருப்பினும், விரைவில் இயல்பு நிலை திரும்பவேண்டும் என்கிற எதிர்பார்ப்போடு, நிறுவனங்கள், படிப்படியான இயக்கத்தை துவக்கியுள்ளன.
எதிர்பார்ப்புடன் ஏற்றுமதியாளர்கள்
அமெரிக்காவுக்கான ஆர்டர்கள் குறைந்தாலும்கூட, ஐரோப்பா போன்ற பிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட ஆர்டர்கள், ஆடை உற்பத்தி நிறுவனங்கள் வசம் உள்ளன. சர்வதேச சந்தையில் நல்ல மாற்றங்கள் நிகழும், வரும் நாட்களில் அதிகளவு ஆர்டர்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடும், தொழிலாளர்களின் வருகையை எதிர்பார்த்து, தீபாவளிக்குப்பிறகு நிறுவனங்கள் இயக்கத்தை துவக்கியுள்ளன.


