ADDED : பிப் 02, 2024 12:36 AM
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில் நாளை எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனறிவுத் தேர்வு, 22 மையங்களில் நடக்கிறது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்வியை தொடர்வதை ஊக்குவிக்க, மத்திய அரசு, தேசிய வருவாய் வழி திறனறிவுத் (என்.எம்.எம்.எஸ்.,) தேர்வை, ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. நடப்பாண்டுக்கான தேர்வு நாளை(பிப்., 3ம் தேதி) நடக்கவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், 6,508 மாணவ, மாணவியர் இத்தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். 22 மையங்களில் தேர்வு நடக்கிறது.


