Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ செவிலியர்கள் போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது

செவிலியர்கள் போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது

செவிலியர்கள் போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது

செவிலியர்கள் போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது

ADDED : செப் 18, 2025 11:32 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்; திருப்பூர் அரசு மருத்துவமனை பணியாளர்கள், இரண்டாவது நாளாக கருப்பு பேட்ஜ் அணிந்து, தர்ணா போராட்டம் நடத்தினர்.

திருப்பூர், வி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த நாகஜோதிகா, 23 என்பவருக்கு, கடந்த, 3 நாளுக்கு முன், திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்து, இறந்தது. ஆத்திரமடைந்த அவரின் உறவினர்கள், 'டாக்டர்கள் உரிய சிகிச்சை வழங்காததால் தான், குழந்தை இறந்தது' எனக்கூறி, டாக்டர்கள், பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரசவ வார்டு கண்ணாடியையும் உடைத்தனர்.

இதனையடுத்து, 'பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் சார்பில், கருப்பு பேட்ஜ் அணிந்து, செவிலியர்கள் பணிபுரிந்தனர்.

நேற்று, இரண்டாவது நாளாக, கோரிக்கையை வலியுறுத்தி, மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போரட்டம் நடத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us