ADDED : செப் 26, 2025 05:25 AM
உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்டில், புறநகர், டவுன்பஸ்கள் வந்து செல்கின்றன. இவற்றில் ஏராளமான பயணியர் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றனர். அங்கு திருப்பூர் பஸ்கள் நிற்கும் இடத்தில், பயணியர் காத்திருக்கும் இடத்தில் சிறிய கடைகள் போடப்படுகின்றன. இதனால், அவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.