ADDED : செப் 23, 2025 08:29 PM
உடுமலை, ; உடுமலை கிராமங்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து, புறநகர் மற்றும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர்.
ஆனால், கடைகோடி கிராமங்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை. இதனால், இயக்கப்படும் குறைந்த அளவிலான பஸ்களில், மக்கள் தொங்கிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனால், விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, போக்குவரத்துக்கழக அதிகாரிகள், உடுமலை பகுதியிலுள்ள கிராமங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.