ADDED : செப் 17, 2025 08:58 PM
உடுமலை; உடுமலை புதிய பஸ் ஸ்டாண்டில், பயணியர் அமர இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும்.
உடுமலை பஸ் ஸ்டாண்டினை ஒட்டி புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு பயணியர் அமர போதிய இருக்கையும், நிழற்கூரையும் இல்லை. இதனால், அவர்கள் நீண்ட நேரம் திறந்த வெளியில் நிற்பதோடு, வெயிலில் காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, அங்கு நிழற்கூரை, இருக்கை வசதிகளை நகராட்சியினர் ஏற்படுத்தித்தர வேண்டும்.


