/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஒலிக்கும் சலங்கை; பறக்கும் பந்து; பார்வையற்றோர் மாநில கிரிக்கெட் அணி தேர்வு; மாணவர்களுக்கு ஊட்டுகிறது தன்னம்பிக்கை ஒலிக்கும் சலங்கை; பறக்கும் பந்து; பார்வையற்றோர் மாநில கிரிக்கெட் அணி தேர்வு; மாணவர்களுக்கு ஊட்டுகிறது தன்னம்பிக்கை
ஒலிக்கும் சலங்கை; பறக்கும் பந்து; பார்வையற்றோர் மாநில கிரிக்கெட் அணி தேர்வு; மாணவர்களுக்கு ஊட்டுகிறது தன்னம்பிக்கை
ஒலிக்கும் சலங்கை; பறக்கும் பந்து; பார்வையற்றோர் மாநில கிரிக்கெட் அணி தேர்வு; மாணவர்களுக்கு ஊட்டுகிறது தன்னம்பிக்கை
ஒலிக்கும் சலங்கை; பறக்கும் பந்து; பார்வையற்றோர் மாநில கிரிக்கெட் அணி தேர்வு; மாணவர்களுக்கு ஊட்டுகிறது தன்னம்பிக்கை

முக்கியத்துவம் வேண்டும்
நட்பு வட்டம் விரிகிறது
நான் மதுரையில் வசிக்கிறேன்; போட்டி தேர்வு வாயிலாக, வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரிகிறேன். 10 ஆண்டாக கிரிக்கெட் விளையாடுகிறேன். பல இடங்களுக்கு சென்று விளையாடுவதன் வாயிலாக திறமை வளர்வதுடன், நட்பு வட்டம் விரிவடைகிறது; இது, எங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும். கிரிக்கெட் விளையாடுவதன் வாயிலாக, எனக்குள்ள குறையை மறந்து போகிறேன். அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்புகள் நிரம்பிக்கிடக்கின்றன. நமக்கு எது நன்றாக தெரியுமோ, அதில் திறமையை வளர்த்துக் கொள்ளும் போது, சாதிக்க முடியும்.- தினேஷ், 32, கிரிக்கெட் வீரர்
உதவியால் கிடைக்கும் நம்பிக்'கை'
நான் கன்னியாகுமரியை சேர்ந்தவன்; விழுப்புரத்தில் தபால் துறையில் பணிபுரிகிறேன். விளையாடும் போது, சுற்றியிருப்பவர்கள் அளிக்கும் ஊக்குவிப்பு, எனக்குள்ள குறையை மறக்க செய்கிறது. எங்களுக்கு ரோட்டரி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தேவையான உதவிகளை செய்வதன் வாயிலாக தான் இதுபோன்று வெளியிடங்களுக்கு சென்று விளையாட முடிகிறது. இத்தகைய உதவியால் தன்னம்பிக்கை பெறுகிறோம். எங்களது சீனியர் வீரர்கள் பலர் தேசிய அளவில் விளையாடி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றை பெறும் போது, மற்றவர்களும் உற்சாகம் பெறுகின்றனர். நம்பிக்கையை வளர்த்துக் கொள்கின்றனர்.


