Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஸ்ரீகாரணப்பெருமாள் திருக்கல்யாண உற்சவம்

ஸ்ரீகாரணப்பெருமாள் திருக்கல்யாண உற்சவம்

ஸ்ரீகாரணப்பெருமாள் திருக்கல்யாண உற்சவம்

ஸ்ரீகாரணப்பெருமாள் திருக்கல்யாண உற்சவம்

ADDED : அக் 19, 2025 10:52 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்: மங்கலம் ஊராட்சி, அக்ரஹாரப்புத்துார் மற்றும் வேட்டுவபாளையம் கருவேலாங்காடு (காட்டுக்கோவில்) பகுதியில், ஸ்ரீகாரணப்பெருமாள் கோவில்கள் உள்ளன. ஆறு கிராமங்களை சேர்ந்த மக்கள் இணைந்து நடத்தும் திருக்கல்யாண உற்சவ விழா, ஐப்பசி முதல் சனிக்கிழமை நடந்து வருகிறது.

கடந்த 17ம் தேதி, கொண்டி தீர்த்தம், பிறந்த வீட்டு சீர்வரிசை எடுத்துவரப்பட்டது. நேற்று முன்தினம் காலை, சாமளாபுரம் வரதராஜபெருமாள் கோவில் பட்டாச்சாரியார்கள் தலைமையில், ஸ்ரீதேவி பூதேவி சமேத காரணப்பெருமாளுக்கு, திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது.

நேற்று காலை, நொய்யல் கரையில், கருட வாகனத்தில் காரணப்பெருமாளும், ஸ்ரீதேவிபூதேவி சமேத காரணப்பெருமாள் தனி சப்பரத்திலும் எழுந்தருளினர். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, தாசர்கள் பந்தசேர்வை எடுத்து ஆடினர். அருளாடிய தாசர்கள், 'கவாளம்' எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நேற்று இரவு, 7:00 மணிக்கு, சுவாமிகள், வாண வேடிக்கையுடன், காட்டுகோவிலுக்கு புறப்பட்டன. இரவு, 10:00 மணிக்கு, ஹரிசேவையும், 'கவாள' பூஜையும் நடந்தது. முன்னதாக, கோவில் சுத்தி புண்யாகவாசனை பூஜைகள், 17ம் தேதி அதிகாலை நடந்தன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us