Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கதரின் தலைநகரம் திருப்பூர்; அன்றே புகழாரம் சூட்டிய காந்திஜி

கதரின் தலைநகரம் திருப்பூர்; அன்றே புகழாரம் சூட்டிய காந்திஜி

கதரின் தலைநகரம் திருப்பூர்; அன்றே புகழாரம் சூட்டிய காந்திஜி

கதரின் தலைநகரம் திருப்பூர்; அன்றே புகழாரம் சூட்டிய காந்திஜி

ADDED : அக் 02, 2025 01:18 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்: காந்தியடிகள் பிறந்த நாளான இன்று, அவரது நினைவலைகளைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்

திருப்பூரை 'கதர் தொழிலின் தலைநகரம்' என 100 ஆண்டுகளுக்கு முன்பே புகழ்ந்தவர் காந்தியடிகள். திருப்பூர் வரலாற்று ஆய்வு மைய அமைப்பாளர் சிவதாசன் கூறியதாவது:

பிற பகுதிகளை காட்டிலும், மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த ஊர், திருப்பூர். அதற்கு காரணம் அவருக்கு மிகவும் பிடித்த கதர் உற்பத்தியின் கேந்திரமாக திருப்பூர் விளங்கியதுதான்.

கடந்த, 1920, ஆக., 20ம் தேதி, முதன் முதலாக, ரயில் மார்க்கமாக, திருப்பூர் வந்தார் காந்தி. நொய்யலாற்றங்கரையில் நடத்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அதன் பின், 1921ல், திருப்பூருக்கு வந்த அவரை, 500 பெண்கள், ராட்டையில் நுால் நுாற்று வரவேற்றனர்; எங்குமில்லாத வகையில், ரயில் நிலையமெங்கும் கதர் தோரணங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.

கடந்த, 1925ல்மீண்டும் திருப்பூர் வந்த அவரை பொதுமக்கள், ரயில்வே தொழிலாளர்கள் வரவேற்று, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

இடுவம்பாளையத்தில் கதர் நெசவு தொழில் நடப்பதை கேள்விபட்டு, அங்கு சென்று பார்வையிட்ட அவர், மகிழ்ச்சியடைந்தார்.

ராட்டையில் நெசவு செய்துகொண்டிருந்தவர்களுக்கு, தலா நான்கணா கொடுத்து பெருமைப்படுத்தினார் என்பது வரலாற்று பதிவு.

அன்று மாலை, திருப்பூர் நகராட்சி சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது அவர் பேசுகையில், 'இந்தியாவுக்கு தலைநகரம் டில்லி என்ற போதிலும், கதருக்கு தலைநகரம் திருப்பூர்' என குறிப்பிட்டார்.காந்தியடிகளுக்கும், திருப்பூருக்குமான உறவு நெருக்கமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

- இன்று காந்தி ஜெயந்தி (அக்.2)

குமரன் இறந்த இடத்தில் அஞ்சலி


கடந்த, 1934 பிப். 6ல் திருப்பூர் வந்த காந்தி, திருப்பூர் குமரன் அடிபட்டு இறந்த இடத்தில் அஞ்சலி செலுத்தினார். பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில், மக்கள் வழங்கிய நிதி அவரிடம் வழங்கப்பட்டது. சிலர் விலையுயர்ந்த பொருட்களை நிதியாக வழங்கினர். திருப்பூரை 'இந்தியாவின் லாங்க்ஷ்யர்' எனக்கூறி பெருமைப்படுத்தினார். ஊக்குவிக்கும் சக்தியாக, பி.டி.ஆஷர் தம்பதியினர் விளங்கினர். அதனால் தான், அகில இந்திய மகிளா காங், பொருளாளராக பத்மாவதி ஆஷரை, காந்தியடிகள் நியமித்தார்.

நகைகளை வழங்கிய சுந்தராம்பாள்


கடந்த, 1927 ஜூலை, 22ல், தன் துணைவியார் கஸ்துாரிபாவுடன் திருப்பூர் வந்த காந்தி, மங்கள விலாஸ் மாளிகையில் தங்கினார். மறுநாள் அதிகாலை நகராட்சிப்பள்ளி மாணவர்களுக்கு பகவத் கீதை வகுப்பு துவக்கி வைத்தார். பின், தற்போதைய டவுன் ஹால், அப்போதைய ரேடியோ மைதான பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அந்த கூட்டத்தில் தான், வீரபாண்டியை சேர்ந்த சுந்தராம்பாள், தன் அணிந்திருந்த நகைகளை, சுதந்திர போராட்ட நிதிக்காக வழங்கினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us