Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/'வந்தே பாரத்' ரயில் இயக்கம் பிப்., இறுதி வரை நீட்டிப்பு 

'வந்தே பாரத்' ரயில் இயக்கம் பிப்., இறுதி வரை நீட்டிப்பு 

'வந்தே பாரத்' ரயில் இயக்கம் பிப்., இறுதி வரை நீட்டிப்பு 

'வந்தே பாரத்' ரயில் இயக்கம் பிப்., இறுதி வரை நீட்டிப்பு 

ADDED : பிப் 01, 2024 12:04 AM


Google News
திருப்பூர் : கடந்தாண்டு நவ., 28 முதல், கோவையில் இருந்து சென்னைக்கு செவ்வாய்தோறும் வந்தே பாரத் ரயில் (எண்:06035) இயக்கப்பட்டு வருகிறது. காலை, 7:10 மணிக்கு சென்னையில் புறப்படும் ரயில் மதியம், 2:15 மணிக்கு கோவை வந்தடைகிறது; மறுமார்க்கமாக மதியம், 3:05 மணிக்கு கோவையில் புறப்பட்டு, இரவு, 9:50 மணிக்கு சென்னை சென்று சேர்கிறது.

முந்தைய அறிவிப்பின்படி, நேற்று முன்தினத்துடன் (30ம் தேதி) 'வந்தே பாரத் ரயிலுக்கான இயக்கம் முடிந்த நிலையில், பிப்., 6 முதல், 27ம் தேதி வரையிலான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி. பிப்., 27ம் தேதி வரை, தொடர்ந்து செவ்வாய்தோறும் 'வந்தே பாரத'் ரயில் இயங்கும்.

தற்போது, புதன் தவிர, வாரத்தின் ஆறு நாட்கள் கோவை - சென்னை வந்தே பாரத் ரயில் (எண்: 20644) இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் சேலத்தில் இருந்து எங்கும் நிற்காமல் சென்னை செல்கிறது. அதேநேரம், செவ்வாய்தோறும் இயக்கப்படும் 'வந்தேபாரத்' ரயில் சேலம் கடந்த பின் ஜோலார்பேட்டை, காட்பாடியில் நின்று செல்லும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us