Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ காய்கறி வரத்து குறைவு; விலை அதிகரிப்பு

காய்கறி வரத்து குறைவு; விலை அதிகரிப்பு

காய்கறி வரத்து குறைவு; விலை அதிகரிப்பு

காய்கறி வரத்து குறைவு; விலை அதிகரிப்பு

ADDED : செப் 18, 2025 09:50 PM


Google News
உடுமலை; உடுமலை உழவர் சந்தைக்கு உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள், தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்குவதற்கு வருகின்றனர். தற்போது, காய்கறிகளின் வரத்து குறைந்துள்ள நிலையிலும், காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது.

நேற்றுமுன்தினம் சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ. 35- 42 வரை விற்றது. பெரியவெங்காயம், 25- 30, உருளைக்கிழங்கு, 35 - 36, மிளகாய், 60 - 65, வெண்டைக்காய், 25 -30, முருங்கைக்காய், 65- 75, பீர்க்கங்காய், 48-55, சுரைக்காய், 15-24, புடலங்காய், 36-42, பாகற்காய், 48-55, தேங்காய், 68-72, முள்ளங்கி, 20-24 விற்கப்பட்டது.

மேலும், பீன்ஸ், 52-58, கேரட், 70-75, வாழைப்பழம், 70-80 விற்பனையானது. மேலும் சந்தைக்கு கீரைகள் வரத்து குறைந்து காணப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us