Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ரூ.5.53 கோடியில் பணிகள்

ரூ.5.53 கோடியில் பணிகள்

ரூ.5.53 கோடியில் பணிகள்

ரூ.5.53 கோடியில் பணிகள்

ADDED : பிப் 12, 2024 12:50 AM


Google News
மூலனுார் பேரூராட்சி ராக்கியாவலசில், 2.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார்ரோடு பணி; நமக்குநாமே திட்டத்தில், மேட்டுப் பட்டியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் ரோடு புதுப்பிக்கும்பணி; பொது நிதி பணிகள் திட்டத்தில், 1.69 கோடியில் கான்கிரீட் ரோடு பணிகள் துவக்கிவைக்கப்பட்டன. இதுதவிர மூலனுார் ஒன்றியத்திலும் சேர்த்து மொத்தம் 5.53 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்ட பணிகள் துவக்கிவைக்கப்பட்டன; அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் பணிகளை துவக்கிவைத்தனர். முடிவடைந்த பணிகள், பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவர் பத்மநாபன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் சீனிவாசன், மூலனுார் பேரூராட்சி தலைவர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us