ADDED : பிப் 12, 2024 12:50 AM
மூலனுார் பேரூராட்சி ராக்கியாவலசில், 2.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார்ரோடு பணி; நமக்குநாமே திட்டத்தில், மேட்டுப் பட்டியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் ரோடு புதுப்பிக்கும்பணி; பொது நிதி பணிகள் திட்டத்தில், 1.69 கோடியில் கான்கிரீட் ரோடு பணிகள் துவக்கிவைக்கப்பட்டன. இதுதவிர மூலனுார் ஒன்றியத்திலும் சேர்த்து மொத்தம் 5.53 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்ட பணிகள் துவக்கிவைக்கப்பட்டன; அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் பணிகளை துவக்கிவைத்தனர். முடிவடைந்த பணிகள், பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவர் பத்மநாபன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் சீனிவாசன், மூலனுார் பேரூராட்சி தலைவர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.