Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ ரூ.10,000 லஞ்சம் பெண் தாசில்தார் சிக்கினார்

ரூ.10,000 லஞ்சம் பெண் தாசில்தார் சிக்கினார்

ரூ.10,000 லஞ்சம் பெண் தாசில்தார் சிக்கினார்

ரூ.10,000 லஞ்சம் பெண் தாசில்தார் சிக்கினார்

ADDED : ஜூன் 16, 2024 02:12 AM


Google News
ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் ராமசந்திரபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 50; அரசு பணி கான்ட்ராக்டர். இவர், 20 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் எடுத்துள்ளார். அதற்கு சொத்து மதிப்பு சான்றளிக்க வேண்டும்.

இதற்காக அவர் ஆரணி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். தாசில்தார் மஞ்சுளா, 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். சீனிவாசன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் கொடுத்தனுப்பிய, 10,000 ரூபாயை நேற்று முன்தினம் இரவு மஞ்சுளாவிடம், சீனிவாசன் கொடுத்தார். அவர், இரவு வாட்ச்மேன் பாபுவிடம் கொடுக்குமாறு கூறினார். பாபு பணத்தை பெற்று, தாசில்தார் மஞ்சுளாவிடம் வழங்கிய போது, போலீசார் இருவரையும் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us