Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சியில் சேதமடைந்த பாலம் 30 நாளில் சீரமைப்பு பணி முடியும்

திருச்சியில் சேதமடைந்த பாலம் 30 நாளில் சீரமைப்பு பணி முடியும்

திருச்சியில் சேதமடைந்த பாலம் 30 நாளில் சீரமைப்பு பணி முடியும்

திருச்சியில் சேதமடைந்த பாலம் 30 நாளில் சீரமைப்பு பணி முடியும்

ADDED : ஜன 13, 2024 11:28 PM


Google News
Latest Tamil News
திருச்சி:திருச்சி -- சென்னை பைபாஸ் சாலையில், சேதமடைந்த பாலத்தை, என்.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.டி., வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.

அங்கு பொன்மலை ரயில்வே ஸ்டேஷன், ஜீ கார்னர் பகுதியில், இரு மேம்பாலங்கள் உள்ளன. அதில், திருச்சி - சென்னை மார்க்கத்தில் உள்ள பாலத்தின் ஒரு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, கடந்த, 11ம் தேதி இரவு பழுதானது.

நெடுஞ்சாலை துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டனர். பாலத்தின் மீதான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு, பழைய பாலத்தின் வழியாக, இரு மார்க்க போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டது.

இதனால் பொங்கல் பண்டிகைக்கு போக்குவரத்து அதிகம் இருப்பதால், சமயபுரம் டோல்கேட்டில் இருந்து, டி.வி.எஸ்., டோல்கேட் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்

மதுரை, மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் டிப்பர், டிரைலர் லாரி, ஆம்னி பஸ்கள் போன்ற கனரக வாகனங்கள், திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலுார் வழியாக திருப்பி விடப்படுகிறது.

சென்னையில் இருந்து வரும் கனரக வாகனங்கள், அதே போல் பெரம்பலுார் வழியாக திண்டுக்கல், மதுரை செல்ல வேண்டும்.

சென்னை, பெரம்பலுார், அரியலுார் பகுதியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி, பால்பண்ணை, துவாக்குடி மற்றும் புதிய சுற்றுச்சாலை வழியாக செல்ல வேண்டும்.

கார், பயணியர் பஸ் போன்ற வாகனங்கள் வழக்கமான வழித்தடத்தில் அனுமதிக்கப்படுகின்றன.

மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்த பாலத்தை அமைச்சர்கள் நேரு, மகேஷ் ஆகியோர் நேற்று பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அதிகாரிகள் கூறுகையில், 'பாலத்தில், மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியை மட்டும் அப்புறப்படுத்தி விட்டு, புதிதாக மண் கொட்டி, கற்களை அடுக்கி சீரமைக்கலாம் என, திட்டமிடப்பட்டுள்ளது.

'இரவு, பகலாக பணி செய்து, 30 நாட்களில் முடிக்கப்பட்டு, மீண்டும் வல்லுனர் குழு ஆய்வுக்கு பின், போக்குவரத்து துவங்கப்படும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us