Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/காளை முட்டி டிரைவர் பலி அவிழ்த்து விட்டோர் கைது

காளை முட்டி டிரைவர் பலி அவிழ்த்து விட்டோர் கைது

காளை முட்டி டிரைவர் பலி அவிழ்த்து விட்டோர் கைது

காளை முட்டி டிரைவர் பலி அவிழ்த்து விட்டோர் கைது

ADDED : ஜன 19, 2024 02:11 AM


Google News
திருச்சி:திருச்சி மாவட்டம், கல்லக்குடி அருகே உள்ள கல்லகம் மாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, கிராமத்தைச் சேர்ந்த பலர், நேற்று முன்தினம் உரிய முன் அனுமதியின்றி, தங்களின் ஜல்லிக்கட்டு காளைகளை கோவில் முன் அவிழ்த்து விட்டனர். சீறிப்பாய்ந்த காளைகளில் ஒன்று, கோவில் அருகே நின்றிருந்த லாரி டிரைவர் பாலகிருஷ்ணனை முட்டியது.

படுகாயம் அடைந்த அவர், தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். பாலகிருஷ்ணன் மனைவி தனலட்சுமி, கல்லக்குடி போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிந்து, அனுமதியின்றி காளைகளை அவிழ்த்து விட்ட, அதே ஊரைச் சேர்ந்த எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து, ஐந்து பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி; வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us