Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்கு

அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்கு

அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்கு

அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்கு

ADDED : ஜூன் 04, 2024 05:20 AM


Google News
விழுப்புரம் : வளவனுார் அருகே முன்விரோத தகராறில் அண்ணனை தாக்கிய தம்பி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராயலு, 63; இவரது தம்பி பழனி, 61; கடலுார் மாவட்டம், மேலக்குப்பத்தில் வசிக்கிறார். இவர்களின் பூர்வீக சொத்தான 12 ஏக்கர் நிலம் பாகப்பிரிவினையில் இருவருக்கும் இடையே பிரச்னை உள்ளது.

இந்நிலையில், கடந்த 29ம் தேதி பழனி, வளவனுார், டி.புதுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சுப்புராயலுவை திட்டி, தாக்கினார்.

இதுகுறித்த புகாரின் பேரில், பழனி மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us