ADDED : ஜூன் 16, 2024 06:31 AM
மரக்காணம்: கோட்டக்குப்பம் அடுத்த ஆப்பிரம்பட்டில் துாங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் செயினை பறித்துச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோட்டக்குப்பம் அடுத்த ஆப்பிரம்பட்டைச் சேர்ந்தவர் மணி மனைவி ரமா, 51; இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்வாசல் பகுதியில் துாங்கிக் கொண்டிருந்தார்.அப்போது, மர்ம நபர்கள் இருவர் வீட்டிற்குள் புகுந்து இரண்டு வெள்ளி குத்துவிளக்கை எடுத்து கொண்டு வரும்போது மூதாட்டி ரமா கழுத்தில் இருந்த 2 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.