Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஜீவன் ரக் ஷா பதக்க விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

ஜீவன் ரக் ஷா பதக்க விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

ஜீவன் ரக் ஷா பதக்க விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

ஜீவன் ரக் ஷா பதக்க விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

ADDED : ஜூன் 26, 2024 03:14 AM


Google News
விழுப்புரம் : இந்திய அரசின் ஜீவன் ரக் ஷா பதக்க விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

இந்திய அரசின் சார்பில், பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு, மத்திய அரசின் ஜீவன் ரக் ஷா பதக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக் ஷா பதக்கம் வழங்கப்படுகிறது. துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு, மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு உத்தம் ஜீவன் ரக் ஷா பதக்கம் வழங்கப்படுகிறது.

தனக்கு காயம் ஏற்பட்டாலும் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ஜீவன் ரக் ஷா பதக்கம், வழங்கப்படும்.

2024ம் ஆண்டிற்கான ஜீவன் ரக் ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதிக்குப் பின் பல்வேறு நிலைகளில் மனித உயிர்களை காப்பாற்றியவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது.

இவ்விருதிற்கான விண்ணப்பம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். வரும் 26ம் தேதிக்குள் கலெக்டர் பரிந்துரையுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

விருது தொடர்பாக இதர விபரங்களை, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 7401703485 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்புகொண்டு விபரம் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us