Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் பென்ஷனர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் பென்ஷனர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் பென்ஷனர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் பென்ஷனர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

ADDED : ஜூன் 26, 2024 11:10 PM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு 19ம் ஆண்டு விழா நேற்று நடந்தது.

விழுப்புரம் ஏஎஸ்ஜி மண்டபத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட தலைவர் சிவகுருநாதன் தலைமை வகித்தார். மாநில பிரிதிநிதிகள் கோபாலகிருஷ்ணன், ஜோதி, ஆய்வுக்குழு உறுப்பினர் ஜானகிராமன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் குகசரவணபவன் வரவேற்றார்.

துணை செயலாளர் ராஜகோபால் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் கோவிந்தராஜ் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட செயலாளர் சேதுவிவேகானந்தன் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

பணி நிறைவு பெற்ற புதிய உறுப்பினர்களுக்கு, மாநில துணைத்தலைவர் ராமுசிதம்பரம், மாநில தணிக்கை உறுப்பினர் துரைக்கண்ணு ஆகியோர், நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.

சங்க உறுப்பினர்கள் எழுதிய புதிய புத்தகங்களை வெளியிட்டும், மாநில பொதுச் செயலாளர் தங்கராசா, விருதுகளை வழங்கியும் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் செஞ்சி, காணை, திருவள்ளூர் வட்டார நிர்வாகிகளை பாராட்டி மாநில பொருளாளர் ராமசாமி நினைவு விருதுகளை வழங்கினார். மாவட்ட கருவூல அலுவலர் ராமச்சந்திரன் வாழ்த்தி பேசினார்.

கூட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் மற்றும் மருத்துவப்படியை ரூ.1000 உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி தொகையை ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டம் ஓய்வூதியர்களுக்கு பயன் தரும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us