ADDED : ஜூன் 27, 2024 11:45 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், புலவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிராமன் மகள் பவுனிஷா, 24; எம்.எஸ்சி., பட்டதாரி. இவர், விழுப்புரம், மரகதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்தார்.
இவர், கடந்த 25ம் தேதி வீட்டிலிருந்து பணிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.