ADDED : ஜூலை 26, 2024 10:57 PM
விழுப்புரம்: வளவனுார், செங்காடு பீடரில் இன்று (27 ம் தேதி) பராமரிப்பு பணி செய்யவுள்ளதால், காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பவர் கிரேட் கார்ப்பரேசன் இந்தியா லிட்., புதுச்சேரி நிறுவனம், 400 கே.வி., அதிஉயர் அழுத்த மின்கம்பி நிறுவும் பணிகளை மற்றொரு நாளில் செய்ய உத்தேசித்துள்ளதால் செங்காடு பீடரில் உத்தேசிக்கப்பட்ட மின்தடை பணி ரத்து செய்யப்பட்டுள்ளது.