/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/9 சவரன் நகை திருட்டு போலீஸ் விசாரணை9 சவரன் நகை திருட்டு போலீஸ் விசாரணை
9 சவரன் நகை திருட்டு போலீஸ் விசாரணை
9 சவரன் நகை திருட்டு போலீஸ் விசாரணை
9 சவரன் நகை திருட்டு போலீஸ் விசாரணை
ADDED : பிப் 25, 2024 05:22 AM
விழுப்புரம், : விழுப்புரத்தில் அழகு நிலைய உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
முண்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுந்தர் மனைவி சூரியா, 35; அழகு நிலைய உரிமையாளர். இவர், விழுப்புரம், வண்டிமேடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அழகு நிலையத்திற்குச் சென்றவர் பிற்பகல் 3:00 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 9 சவரன் நகை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.