Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/செம்மண் குவாரி வழக்கில் சேர்க்கக்கோரிய அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் மனு தள்ளுபடி

செம்மண் குவாரி வழக்கில் சேர்க்கக்கோரிய அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் மனு தள்ளுபடி

செம்மண் குவாரி வழக்கில் சேர்க்கக்கோரிய அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் மனு தள்ளுபடி

செம்மண் குவாரி வழக்கில் சேர்க்கக்கோரிய அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் மனு தள்ளுபடி

ADDED : ஜன 24, 2024 04:33 AM


Google News
விழுப்புரம் : பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை, விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டுகள் வரை அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி., உட்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கு விசாரணையில் அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்தனர். அதனையொட்டி, இவ்வழக்கில் அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக்கோரி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த செப்டம்பர் 8ம் தேதி மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, வழக்கிற்கு சம்மந்தமில்லாத மூன்றாவது நபர் கிரிமினல் வழக்கில் தலையிடக் கூடாது என ஏற்கனவே பிறப்பித்துள்ள சென்னை ஐகோர்ட்டின் முன் தீர்ப்பை மேற்கோள் காட்டி, ஜெயக்குமார் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 29ம் தேதி நடைபெறும் என உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us