ADDED : செப் 25, 2025 11:32 PM

திண்டிவனம்: திண்டிவனம், தனியார் திருமண நிலையத்தில், மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில், உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.
வேளாண்மை துணை இயக்குநர் குமாரி ஆனந்தி வரவேற்றார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சீனுவாசன் திட்ட விளக்க உரையாற்றினார்.
விழாவிற்கு திண்டிவனம் சப்கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கி, உயிர்ம வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்க கையேட்டை வெளியிட்டு பேசினார். செஞ்சி எம்.எல்.ஏ., மஸ்தான் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இதில் திண்டிவனம் நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் ஷீலாதேவி சேரன், மரக்காணம் ஒன்றிய துணை சேர்மன் பழனி, வேளாண் அதிகாரிகள் பிரேமலதா, சரவணன், சுமதி, திருவரசன், துரைசாமி, லெலின், சீத்தாராமன், அன்பழகன், பாலசுப்ரமணியன், சந்துரு, வல்லம் வேளாண் உதவி இயக்குநர் சரணவன், கவுன்சிலர் சத்தீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வானுார் வேளாண் உதவி இயக்குநர் எத்திராஜ் நன்றி கூறினார்.