Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பட்டாவில் திருத்தம்: சிறப்பு முகாம்

பட்டாவில் திருத்தம்: சிறப்பு முகாம்

பட்டாவில் திருத்தம்: சிறப்பு முகாம்

பட்டாவில் திருத்தம்: சிறப்பு முகாம்

ADDED : மே 19, 2025 06:23 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், பட்டாவில் இறந்தவர்களின் பெயர்களை நீக்கி, வாரிசுதாரர்கள், உரிமையாளர்களின் பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

கிராமங்கள் மற்றும் நகர்ப் புறங்களில் உள்ள நிலங்களின், நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு, இணைய வழியில், பொதுமக்கள் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.

இருப்பினும், பல சிட்டாவிலுள்ள பட்டாதாரர்களுள் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும், அவர்களின் பெயர்களுக்கு பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.

எனவே, பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட உள்ளன. இதற்காக, பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ--சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது சிட்டிசன் போர்ட்டல் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில், வரும் ஜமாபந்தி நிகழ்வில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆணை பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us