/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தந்தை, மகன் மீது தாக்குதல் வாலிபர் மீது வழக்கு தந்தை, மகன் மீது தாக்குதல் வாலிபர் மீது வழக்கு
தந்தை, மகன் மீது தாக்குதல் வாலிபர் மீது வழக்கு
தந்தை, மகன் மீது தாக்குதல் வாலிபர் மீது வழக்கு
தந்தை, மகன் மீது தாக்குதல் வாலிபர் மீது வழக்கு
ADDED : அக் 06, 2025 02:03 AM
விழுப்புரம்: தகராறில் தந்தை, மகனை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த பூத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன், 74; இவரது வீட்டின் சுற்றுசுவரை பக்கத்து வீட்டை சேர்ந்த அருண்குமார், 35; என்பவர் வீடு கழுவிய தண்ணீர் நனைத்துள்ளது. இது குறித்து ஜெயராமன் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த அருண்குமார், ஜெயராமன் மற்றும் அவரது மகன் முருகேசன், 34; ஆகியோரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் அருண்குமார் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


