ADDED : ஜூலை 05, 2025 04:44 AM
செஞ்சி : கடை வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்தார்.
செஞ்சி அடுத்த வல்லம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு மகள் பிரித்தா 21. செஞ்சியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் கடந்த ஆறு மாதமாக வேலை செய்து வந்தார். கடந்த 3ம் தேதி வேலைக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் அவரது தாய் தேவி 43 செஞ்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


