ADDED : மார் 15, 2025 08:46 PM
வானுார்; வானுார் அருகே மினி வேன் டிரைவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வானுார் அடுத்த நாராயணபுரம் ஆலை மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ஜெகன்ராஜ், 35; திருமணம் ஆகாதவர். தனியாக வசித்து வந்த இவர், பல்வேறு இடங்களில் கடன் வாங்கி, மினி வேனில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கெடுத்ததால், கடந்த 13ம் தேதியன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தங்கை சுதா, அளித்த புகாரின் பேரில் வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.