/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வீடூர் அணையில் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம் வீடூர் அணையில் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம்
வீடூர் அணையில் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம்
வீடூர் அணையில் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம்
வீடூர் அணையில் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம்
ADDED : டிச 05, 2025 06:02 AM
விக்கிரவாண்டி: டிட்வா புயல், மழை காரணமாக வீடூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் அணையிலிருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
வீடூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை காரணமாக நீர்வரத்து காரணமாக நேற்று காலை 6:00 மணியளவில் முழு கொள்ளளவான 32 அடியில் (605 மில்லியன் கன அடி) 29 அடியை (391.384 மில்லியன் கன அடி) இருப்பு இருந்தது.
அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக காலை 6:00 மணியிலிருந்து அணைக்கு வினாடிக்கு 953 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. இதனால், அணையில் இருந்து 900 கன அடி உபரி நீர் ஒரு மதகை திறந்து வெளியேற்றப்பட்டது.
9:00 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 1853 கன அடி தண்ணீர் வரத்து வந்தது. அணையிலிருந்து 1800 கன அடி உபரி நீர் மூன்று மதகை திறந்து வெளியேற்றப்பட்டது. பகல் 12:00 மணி அளவில் வினாடிக்கு 4,553 கன அடி தண்ணீர் வரத்து வந்தது. அணையிலிருந்து 4,500 கன அடி உபரி நீர் ஐந்து மதகை திறந்து வெளியேற்றப்பட்டது.
1:00 மணியளவில் வினாடிக்கு 1,853 கனஅடியாக தண்ணீர் வரத்து குறைந்தது .இதை அடுத்து அணையின் மூன்று மதகுகளை திறந்து 1800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
மாலை 4:00 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 953 கனஅடியாக தண்ணீர் வரத்து குறைந்தது அணையின் ஒரு மதகை திறந்து 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.


