/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மயிலம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப விழா மயிலம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப விழா
மயிலம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப விழா
மயிலம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப விழா
மயிலம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப விழா
ADDED : டிச 04, 2025 05:32 AM

மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத் விழா நடந்தது.
மயிலம் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி, இன்று காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு மகாதீபாரதனை நடந்தது.காலை 11:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் ஏராளமானோர் அங்கப்பிரதட்சணம் செய்தும். அலகு குத்திக்கொண்டும் நேர்த்தி கடனை செலுத்தினர்.
மாலை 5:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சங்கு கண்ணர் மண்டபத்தின் மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. தீப வழிபாட்டில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்த னர்.
இரவு 8:00 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.


