Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கூலி தொழிலாளி 'மர்ம' மரணம்

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கூலி தொழிலாளி 'மர்ம' மரணம்

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கூலி தொழிலாளி 'மர்ம' மரணம்

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கூலி தொழிலாளி 'மர்ம' மரணம்

ADDED : அக் 24, 2025 03:31 AM


Google News
Latest Tamil News
திருவெண்ணெய்நல்லூர்: கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலை கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் அம்பாயிரம், 60; இவர் அதே பகுதியில் உள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பண்ணையில் கடந்த 30 ஆண்டுகளாக தினக்கூலி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை 8:00 மணியளவில் வழக்கம் போல், ஆலைக்கு வேலைக்கு சென்றார். பிற்பகல் 3:00 மணி அளவில் அவரை காணவில்லை.

அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் அங்கு சுற்றி தேடிய போது அங்குள்ள மாமரத்து அடியில் சுயநினைவின்றி கிடந்துள்ளார்.

இதுகுறித்து ஆலை நிர்வாகத்தினர் அம்பாயிரம் என்பவரின் வீட்டிற்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு சென்ற உறவினர்கள் அம்பாயிரத்தை கண்டு அதிர்ச்சியடைந்து திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அம்பாயிரம் மர்மமான முறையில் இறந்தது தெரிய வந்தது.

போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அம்பாயிரம் மகன் தேவராஜ் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

ஆலை வளாகத்தில் கூலி தொழிலாளி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி ஆலை நிர்வாகத்தை கண்டித்து இன்று சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அவர் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us