ADDED : அக் 22, 2025 11:06 PM
விழுப்புரம்: சிறுமி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள கோலியனுாரை சேர்ந்த பாஸ்கரன் மகள் ஜனனி, 13; இவர், அங்குள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த, 20ம் தேதி தீபாவளியன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். இது குறித்து வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


