Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் சாவு

சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் சாவு

சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் சாவு

சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் சாவு

ADDED : அக் 22, 2025 09:02 AM


Google News
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் தமிழ்ச்செல்வன், 27; இவர், சென்னையில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

கடந்த 20ம் தேதி மாலை எதிர் வீட்டை சேர்ந்த தேசிங்கு, 56; என்பவருடன் பைக்கில் செஞ்சிக்கு வந்தார். வரும் வழியில் மழையினால் ஏற்பட்ட ஈரத்தில், பைக் வழுக்கி விழுந்ததில் இருவரும் காயம் அடைந்த இருவரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்நிலையில், நேற்று காலை 8:00 மணியளவில் தமிழ்செல்வன் திடீரென தலை அதிகமாக வலிப்பதாக கூறியுள்ளார். உறவினர்கள் அவரை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது வழியில் அவர் இறந்தார்.

இது குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us