Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ திண்டிவனத்தில் உலக ஒற்றுமையை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம்

திண்டிவனத்தில் உலக ஒற்றுமையை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம்

திண்டிவனத்தில் உலக ஒற்றுமையை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம்

திண்டிவனத்தில் உலக ஒற்றுமையை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம்

ADDED : அக் 05, 2025 11:03 PM


Google News
Latest Tamil News
திண்டிவனம்: உலக ஒற்றுமையை வலியுறுத்தி நடந்த மாரத்தான் ஓட்டத்தில் நுாற்றுக்கணக்கான வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

ஆர்.பி.,மிஷன் பவுண்டேஷன் சார்பில் நேற்று காலை 6:30 மணியளவில் 600க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி திண்டிவனம் அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்திலிருந்து துவங்கியது.

சீனியர் பிரிவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஜூனியர் பிரிவில் 10 வயதிலிருந்து 15 வயதிற்கு உட்பட்டவர்கள் பங்கேற்றனர்.மாரத்தான் போட்டியை, மஸ்தான் எம்.எல்.ஏ., கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சீனியர் பிரிவில் 6 கிலோ மீட்டர் துாரத்தை கடந்து முதல் இடத்தை உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தனுஜ் தக்கர், இரண்டாவது இடத்தை மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அஷூதோஷ் யாதவ், மூன்றாவது இடத்தை தீரஜ்குமார் பிடித்தனர்.

ஜூனியர் பிரிவில் முதல் இடத்தை கரூண் பிரித், இரண்டாவது இடத்தை ஹரீஷ்குமார், மூன்றாவது இடத்தை லிங்கேஷ்வரர் பிடித்தனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு மஸ்தான் எம்.எல்.ஏ., பரிசுத்தொகை மற்றும் பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார்.

இதில் நகர்மன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன், செயின்தாமஸ் மவுண்ட் யூனியன் சேர்மன் சங்கீதா பாரதி ராஜன், நகர தி.மு.க.,செயலாளர் கண்ணன், டவுன் டி.எஸ்.பி.,பிரகாஷ், பி.என்.ஆர்.சில்க் ஆதிநாராயணன், சுகாதாரத்துறை மாவட்ட திட்ட அலுவலர் விவேகானந்தன், டாக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us