Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ செஞ்சியில் அரசு வீடு கட்டும் உத்தரவு; மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்

செஞ்சியில் அரசு வீடு கட்டும் உத்தரவு; மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்

செஞ்சியில் அரசு வீடு கட்டும் உத்தரவு; மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்

செஞ்சியில் அரசு வீடு கட்டும் உத்தரவு; மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்

ADDED : ஜூன் 24, 2025 07:03 AM


Google News
செஞ்சி: செஞ்சியில் 85 பயனாளி களுக்கு வீடு கட்டும் உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 85 பயனாளி களுக்கு 2.29 கோடி ரூபாய் மதிப்பில் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.

ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

பி.டி.ஓ., திட்டம் பிரபா சங்கர் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., நடராஜன் வரவேற்றார்.

மஸ்தான் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கி பேசினார்.

துணை பி.டி.ஓ.,க்கள் பழனி, அபிராமி மற்றும் ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us