ADDED : மே 10, 2025 12:33 AM
விழுப்புரம்: மணல் கடத்திய மினி சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வளவனுார் போலீசார் சின்னக்கள்ளிப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்து மணல் கடத்தியவர்கள், மினி வேனை அங்கே நிறுத்திவிட்டு தப்பினர்.
போலீசார் மினி வேனை பறிமுதல் செய்து, வாகன உரிமையாளரான விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் சுரேஷ் மனைவி தேவி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


