Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாயமான முதியவர் சடலமாக மீட்பு

மாயமான முதியவர் சடலமாக மீட்பு

மாயமான முதியவர் சடலமாக மீட்பு

மாயமான முதியவர் சடலமாக மீட்பு

ADDED : அக் 22, 2025 11:09 PM


Google News
திண்டிவனம்: திண்டிவனம் அருகே மாயமான முதியவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

திண்டிவனம் அடுத்த கொள்ளார் காலனியை சேர்ந்தவர் மாணிக்கம், 70; சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 20ம் தேதி மதியம் வீட்டில் இருந்த அவரை காணவில்லை. இந்நிலையில், நேற்று அதே பகுதியை சேர்ந்த முருகன், 47; என்பவர் தனது நிலத்திற்கு சென்றபோது, அங்குள்ள கிணற்றில் மாணிக்கம் இறந்த நிலையில் மிதந்தார்.

ரோஷணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us