Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை

ADDED : மார் 16, 2025 07:24 AM


Google News
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டியில் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் 5 சவரன் நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, பாரதி நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி சாரதா, 42; இவரது கணவர் சென்னையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம், வீடூரில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சாராதா சென்றிருந்தார். நேற்று மாலை 5:00 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மற்றும் 5 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து சாரதா அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us