ADDED : அக் 20, 2025 12:45 AM
விக்கிரவாண்டி: வீட்டிலிருந்து வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
விக்கிரவாண்டி வட்டம், எசாலம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா மனைவி ஆனந்தவல்லி, 23; திருமணம் ஆகி குழந்தை இல்லாததால் கடந்த ஐந்து ஆண்டுகளாக, அதே பகுதியில் உள்ள அவரது தாய் உமா வீட்டில் வசித்து வந்தார். கடந்த செப்டம்பரில், சென்னையில் கட்டட வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பெரியதச்சூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


