Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு

ADDED : ஜூன் 22, 2025 12:54 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம் : திண்டிவனத்தில் கஞ்சா குற்றவாளிகளை பிடித்த சம்பவத்தில், சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

திண்டிவனம் அருகே கொணக்கம்பட்டு பகுதியில், நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் இருந்த போலீசார், நேற்று முன்தினம் சந்தேகத்திற்கு இடமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்து, அதிலிருந்த கஞ்சா மற்றும் 9 போதை மாத்திரைகளை கைப்பற்றி, குற்றவாளிகளையும் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட திண்டிவனம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பலராமன், ஏட்டுகள் மணிகண்டன், ராமமூர்த்தி ஆகியோரை, எஸ்.பி., சரவணன், நேற்று நேரில் அழைத்து பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us