ADDED : ஜன 28, 2024 06:59 AM
அவலுார்பேட்டை, :மேல்மலையனுார் பி.டி.ஓ., அலுவலகத்ததில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
மேல்மலையனுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த விழாவில், ஒன்றிய சேர்மன் கண்மணிநெடுஞ்செழியன் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பேசினார்.
இதில் பி.டி.ஓ.,க்கள் குலோத்துங்கன், சரவணகுமார், மாவட்ட கவுன்சிலர் செல்விராமசரவணன்,ஒன்றியகவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், யசோதரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.