Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆரோவில்லில் வளர்ச்சி திட்டங்கள் ஆய்வு

ஆரோவில்லில் வளர்ச்சி திட்டங்கள் ஆய்வு

ஆரோவில்லில் வளர்ச்சி திட்டங்கள் ஆய்வு

ஆரோவில்லில் வளர்ச்சி திட்டங்கள் ஆய்வு

ADDED : மே 29, 2025 03:24 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: ஆரோவில் அறக்கட்டளை மூலம், கிராமப்புற வீட்டுமனை வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் நேற்று ஆய்வு செய்தார்.

ஆரோவில் பகுதியில் பயன்படுத்தப்படும் குறைந்த செலவு, புதுமையான மேற்கூரை மற்றும் சுவர் அமைப்பு பொருட்கள் தயாரிப்பதை கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் பார்வையிட்டார். கனரக கான்கிரீட் இல்லாமல், இயற்கை மற்றும் நிலை கருவியான பொருட்களை பயன்படுத்தி இரண்டு அல்லது மூன்று மாடி கட்டமைப்புகளை எழுப்பும் தனித்துவமான கட்டுமான முறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் நிலைப்படுத்தப்பட்ட மண் செங்கற்கள், எப்.சி., சேனல் மேற்கூரை அமைப்புகள், நிலையான கட்டுமான முறைகளால் கட்டப்பட்ட பேட்டரி வாகனம் தயாரிப்பு பிரிவை பார்வையிட்டார்.

சூறாவளியால் வீழ்ந்த மரங்களை மீண்டும் பயன்படுத்தும் 'பூஜ்ஜிய கழிவு' நோக்கத்தோடு செயல்படும் மரச்சாமான் பட்டறை, ஆரோவிலின் வீடு, வீட்டிற்கான பயன்பாட்டு பொருட்கள், இயற்கை கைசோப்பு, பாத்திரங்கள் கழுவி, நறுமண மெழுகுவர்த்திகள் ஆகிய உயிரியில் அடிப்படையிலான தயாரிப்புகளை உருவாக்கும் ப்ரோபயாடிக் பிரிவை ஆய்வு செய்தார்.

நிலையான வீட்டு வசதிக்கான ஒத்துழைப்பு மேற்கொள்வது பற்றியும், ஆரோவில் கட்டட கலை மற்றும் கைவினை பொருட்கள், பெண் தொழில்முனைவோருக்கான ஆதரவு திட்டங்கள் குறித்து ஆரோவில் அதிகாரிகளோடு, கலெக்டர் கலந்துரையாடினார்.

ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பத்மஜா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜா உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us