ADDED : ஜூன் 23, 2025 04:53 AM
திண்டிவனம் : வெள்ளிமேடுபேட்டை, செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.
வெள்ளிமேடுப்பேட்டை, செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் போடப்பட்ட சாலைகளை, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார். சாலையின் தடிமன் மற்றும் அகலம், தரம் குறித்து ஆய்வு செய்தார்.
உதவி கோட்ட பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர்கள் கோகுல கிருஷ்ணன், தீனதயாளன் உடனிருந்தனர்.