/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ டிராக்டர் மீது பைக் மோதல் இரு மாணவர்கள் உயிரிழப்பு டிராக்டர் மீது பைக் மோதல் இரு மாணவர்கள் உயிரிழப்பு
டிராக்டர் மீது பைக் மோதல் இரு மாணவர்கள் உயிரிழப்பு
டிராக்டர் மீது பைக் மோதல் இரு மாணவர்கள் உயிரிழப்பு
டிராக்டர் மீது பைக் மோதல் இரு மாணவர்கள் உயிரிழப்பு
ADDED : அக் 03, 2025 05:44 AM

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அருகே டிராக்டர் மீது பைக் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் இறந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் வாஞ்சிநாதன், 18; திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., 2ம் ஆண்டு படித்து வந்தார்.
விழுப்புரம் மாவட்டம், அவலுார்பேட்டை அடுத்த நொச்சலுார், கோவில்புரையூரைச் சேர்ந்தவர் சேட்டு மகன் ஞானேஸ்வரன்,16; அவலுார்பேட்டை ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
உறவினரான இருவரும் நேற்று முன்தினம் இரவு பல்சர் பைக்கில் நொச்சலுாரில் இருந்து தாயானுாருக்கு சென்றனர். பைக்கை வாஞ்சிநாதன் ஓட்டினார்.
இரவு 7:30 மணியளவில் மோட்டூர் கிராமத்தின் வளைவு பகுதியில் சென்றபோது, பின்னோக்கி (ரிவர்சில்) வந்த பதிவெண் இல்லாத டிராக்டர் மீது பைக் மோதியது.
இதில், படுகாயமடைந்த வாஞ்சிநாதன் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஞானேஸ்வர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நள்ளிரவு 12:30 மணிக்கு இறந்தார்.
புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


