Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கார் மோதி பெண் பலி

கார் மோதி பெண் பலி

கார் மோதி பெண் பலி

கார் மோதி பெண் பலி

ADDED : மார் 22, 2025 03:52 AM


Google News
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண் கார் மோதி இறந்தார்.

சென்னை, ஓட்டேரியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் மனைவி ராமதிலகம், 54; இவர், வெளியூர்களில் உள்ள கோவில்களுக்கு தனியாக சென்று வருவது வழக்கம். கடந்த 10ம் தேதி சென்னையில் இருந்து திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று வருவதாக கூறி புறப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணியளவில் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மாமந்துார் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாகச் சென்ற கார் மோதி ராம திலகம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து ராமதிலகம் எதற்காக அங்கு வந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us