ADDED : செப் 19, 2025 03:18 AM
திருவெண்ணெய்நல்லுார்:மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து வேனை பறிமுதல் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் நேற்று அதிகாலை 6:00 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி ஆற்றில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையெடுத்து போலீசார் வேனை பறிமுதல் செய்து மணல் கடத்தி வந்த பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் உதயகுமார்,23; என்பவரை கைது செய்தனர். மேலும் மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.