Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ குடிக்க பணம் தராததால் வாலிபர் தற்கொலை

குடிக்க பணம் தராததால் வாலிபர் தற்கொலை

குடிக்க பணம் தராததால் வாலிபர் தற்கொலை

குடிக்க பணம் தராததால் வாலிபர் தற்கொலை

ADDED : செப் 04, 2025 01:56 AM


Google News
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே மனைவி குடிக்க பணம் தராததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

வானுார் அருகே கொரளூர் கிராமத்தை சேர்ந்தவர் நவேந்திரன், 29; கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாவனா,25; இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இருவரும், விக்கிரவாண்டி அடுத்த தொரவியிலுள்ள பார்த்திபன் என்பவரது நிலத்தில் செங்கல் தயாரிக்கும் வேலை செய்து வந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன், நாவேந்திரன் மனைவி பாவனாவிடம் குடிக்க பணம் கேட்டார். அதற்கு அவர் பணம் தர மறுத்தார்.

இதையடுத்து நாவேந்திரன் பூச்சி மருந்து குடித்து மயங்கினார். அவரை உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us